விழுப்புரம், அக். 11- விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்த லையொட்டி, திமுக பிரச்சார பொதுக்கூட்டம் அன்னியூரில் நடைபெற்றது. இதில், திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசுகையில்,“இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் நா.புகழேந்தி 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” என்றார். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது திமுக. இடைத்தேர்தலில் அதிகாரம், பண பலத்தால் வெற்றிபெறலாம் என அதிமுக நினைக்கிறது. அது முடியாது என்றும் அவர் கூறினார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட பல திட்டங்களை திமுக கொண்டு வந்தது. இடஒதுக்கீடு குறித்த சட்டநாதன் குழு பரிந்துரையை ஏற்றவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். திமுக ஆட்சியில் தான், மருத்துவர் ராமதாஸ் முன்னிலையில் மிகவும் பிற்பட்டோருக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. திமுக கூட்டணியில் இருந்தபோது, அவரது மகன் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவியை கருணாநிதி பெற்றுத் தந்தார் என்றும் துரை முருகன் தெரிவித்தார். இந்த இடைத் தேர்தலில் சாதி, மதம் பார்க்காமல் அரசியல் கண்ணோட்டத்து டன் வாக்களிக்க வேண்டும் என்றும் வாக்கா ளர்களுக்கு வேண்டுகோள்விடுத்தார்.