டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ்: அமைச்சர் பேச்சுவார்த்தை
சென்னை,நவ.3- தீபாவளியையொட்டி பொதுத் துறை நிறுவனங்களுக்கு, அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனங்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் எத்தனை விழுக்காடு வழங்க வேண்டும் என்பதற்கான பேச்சு வார்த்தை சென்னையில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் வெள்ளி யன்று (நவ.3) நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் 21 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. ஒவ்வொரு சங்க பிரதிநிதிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.இவற்றை அமைச்சர் முத்துசாமி பெற்றுக் கொண்டு, ஒவ்வொரு சங்கங்களின் கோரிக்கையையும் கவனமுடன் பரிசீலித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று போனஸ் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
நடிகை பூஜா பட் நில விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
சென்னை,நவ.3- நிலத்தை மீட்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஜெகதாலா என்ற கிராமத்தில் கடந்த 1978ஆம் ஆண்டில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த எம்.குப்பன் என்ப வருக்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, அதை வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் நிபந்தனை விதித்திருந்தார்.
இந்த நிலத்தில், 26.12 செண்ட் நிலத்தை, கல்லூரி வாசல் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த பூஜா பட் கடந்த 1999 ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். பட்டியலினத்த வருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை நடிகை பூஜா பட் வாங்கியது செல்லாது என்றும், அந்த நிலத்தை அரசுக்கு திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று கோத்த கிரி வட்டாட்சியர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து நடிகை பூஜா பட் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, கோத்தகிரி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகை பூஜா பட் தாக்கல் செய்த மேல்முறை யீட்டு வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசா ரணைக்கு வந்த போது, நிலத்தை மீட்டு விட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நிலம் இன்னும் பூஜா பட் வசம் தான் உள்ளதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிலத்தை மீட்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 8 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அதுவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என இரு தரப்பினருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
சென்னை,நவ.3- திருக்கோயில் பணியாளர்கள் அக விலைப்படி 4 விழுக்காடு உயர்த்தப் படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித் துள்ளது.
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி 42 விழுக்காடாக உயர்த்தப்பட்ட அக விலைப்படி தற்போது 46 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறக் கூடிய திருக்கோவில்களில் பணிபுரி யும் நிரந்தர பணியாளர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு 46 விழுக்காடு அகவிலைப்படி வழங் கப்படும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
பகுதிநேர, தினக்கூலி, தொகுப் பூதிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இந்த அக விலைப்படி உயர்வு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அறிவிப்பை முறையாக பின்பற்றுவது உறுதி செய்யவும் அனைத்து சார் நிலை அலு வலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.