சென்னை, ஜூன் 30 - சென்னை விசாலாட்சி தோட்டம் வாரிய குடி யிருப்பு சீலிங் பெயர்ந்து விழுந்ததில் பெண் ஒருவர் காயமடைந்தார். மயிலாப்பூர் தொகுதி, விசாலாட்சி தோட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு கட்டப் பகட்டது. இங்குள்ள 41 பிளாக்குகளில் 646 வீடுகள் உள்ளன. இதுதவிர மக்கள் தனித்தனியாக குடியிருப்பு களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். வாரிய வீடுகள் வலு விழந்ததால் அவற்றை புதுப்பித்து பன்னடுக்கு மாடி வீடுகள் கட்ட 2019 ஆம் ஆண்டு தமிழக அரசு நட வடிக்கை எடுத்தது.
அதன்படி அங்கு வசிக்கும் மக்களுக்கு, அருகாமையில் உள்ளவர்களுக்கு சேர்த்து வீடு கட்டப்பட இருந்தது. இருப்பினும், கட்டுமான பணி கிடப்பில் கிடக்கிறது. இங்குள்ள எப்-பிளாக், எண் 6ல் தெய்வானை (65) என்பவர் தனது மகள், மருமகன், பேரக் குழந்தை களுடன் வசித்து வருகிறார். குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் ஞாயிறன்று (ஜூன் 30) காலை தெய்வானை வீட்டு வேலை செய்து கொண்டி ருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் சீலிங் பெயர்ந்து தெய்வானை தலை மீது விழுந்தது.
அலறி துடித்த அவரை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தெய்வானைக்கு தலையில் தையல் போடப்பட்டது. இதுகுறித்து சிபிஎம் கிளைச் செயலாளர் ரமேஷ் கூறுகையில், “வீடுகள் கட்டி பல வருடங்கள் ஆகிறது. கட்டிடங்கள் வலுவிழந்து உள்ளன. கடந்த வாரம் இசட் பிளாக்கில் சீலிங் பெயர்ந்து விழுந்து ஒரு பெண்ணுக்கு காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடி யாமல் உள்ளனர். அவ்வப்போது மேல்தளம் பூச்சு பெயர்ந்து விழுவது வாடிக்கையாக உள்ளது.
இதனால் மக்கள் அச்சத்தோடு வீட்டிற்குள் உள்ளனர். இரவில் நிம்மதியாக உறங்க கூட முடியவில்லை. சாலையின் மட்டம் உயர்ந்து விட்ட தால் தரைதளத்தில் வசிப்போரின் வீடுகளில் கழிவு நீர் வந்துவிடுகிறது. இவற்றின் காரணமாக பலர் வீடுகளை பூட்டி விட்டு, அருகாமையில் வாட கைக்கு குடியிருக்கின்றனர். எனவே, பெரிய அள வில் அசம்பாவிதங்கள் நிகழும் முன்பு, தமிழக அரசு குடியிருப்புகளை இடித்து விட்டு புதுப்பித்துக் கட்டித்தர வேண்டும்” என்றார்.