தோழர் வி.பி.சிந்தன் 38ஆவது நினைவு தின ரத்ததானம்
தோழர் வி.பி.சிந்தனின் 38ஆவது நினைவு தினத்தையொட்டி சனிக்கிழமையன்று (மே 10) கிண்டியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. சிஐடியு தென்சென்னை மாவட்டக் குழுவும், ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையும் இணைந்து நடத்திய இந்த முகாமை மூத்த தலைவர்கள் எஸ்.அப்பனு, என்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், பொருளாளர் ஏ.நடராஜன், துணைத்தலைவர் எஸ்.சந்தானம், துணைச் செயலாளர் ஏ.சாதிக் பாட்ஷா, ஆட்டோ சங்க நிர்வாகி ஏ.சாந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.