tamilnadu

img

சிறுவனிடம் பாலியல் சீண்டல் செய்த பாஜக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது

சிறுவனிடம் பாலியல் சீண்டல் செய்த பாஜக நிர்வாகி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சென்னை மேற்கு மாவட்டம், அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலசந்தர் என்பவர் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவனை தனது வண்டியில் லிப்ட் கொடுத்து ஏற்றி வந்துள்ளார்.

அப்போது அந்த சிறுவனை யாரும் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அந்த நபரை பிடித்து அவர் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் அதில் பாஜக கட்சி கொடி, பாலசந்தர் என்று பெயரிடப்பட்ட ஐடி கார்டு ஆகியவை இருந்தது. பாலசந்தர் பாஜக பூத் கமிட்டி குழுவை சேர்ந்தவர் என்பது தெரியவ ந்தது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும், அச்சிறுவனின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் பாஜக நிர்வாகியின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

;