சென்னை, செப்.5 - 4 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக தோற்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் து.ராஜா தெரிவித்தார்.
சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய து.ராஜா கூறியதாவது:
நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. பாஜக ஆட்சி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியாது. விரைவில் பாஜக அரசு வீழும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.
பாஜக கடைப்பிடித்த பொருளாதார, சமூக அரசியல் கொள்கைகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஜம்மு -காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து தரப்படும். ஆளுநர் பதவி தேவையற்றது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தி மாற்று வழிமுறைகள் கண்டறியப்படும்.
ஹரியானா, ஜம்மு- காஷ்மீர், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை. இதனால் மக்கள் கொந்த ளிப்பில் உள்ளனர். இந்த மாநி லங்களில் அடுத்தடுத்து நடை பெற உள்ள சட்டமன்ற தேர்தல் களில் பாஜக தோல்வியை தழு வும். நாட்டு மக்கள் மாற்றத்தை நோக்கி நகர்கின்றனர்.
ஒன்றிய பாஜக அரசு மக்கள் விரோத, நாட்டின் நலனில் அக்கறை இல்லாத நாசகர பொருளாதாரக் கொள்கையை செயல்படுத்துகிறது. இந்தியா வில் வேலையின்மை பெருகி உள்ளது என்று சர்வதேச தொழி லாளர் அமைப்பு (ஐஎல்ஓ) கூறுகிறது. நாட்டில் வறுமை நீடிக்கிறது பட்டினி குறியீட்டில் 111வது இடத்தில் இந்தியா உள்ளது. மக்களின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.
வயநாடு நிலச்சரிவை நேரில் பார்த்த பிறகும் பிரதமர் அதை தேசிய பேரிடராக அறிவிக்க வில்லை. கனமழையால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு நிதி உள்ளிட்ட உதவிகளை செய்ய வேண்டும்.
பாஜகவுக்கு சேவகம் செய்யும் ஆளுநர்கள்
கல்வியை ஒத்திசைவுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்க மறுப்பது கண்டனத்திற்குறியது.
ஆளுநர்கள் அரசிய லமைப்பு சட்டத்தை பாது காப்பதற்கு மாறாக, பாஜக விற்கு சேவகம் செய்கின்றனர். தமிழ்நாடு ஆளுநரின் கருத்துக் கள் அபத்தமானவை. கேரள ஆளுநர், தில்லி மற்றும் ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர்கள் தமிழ்நாடு ஆளுநர் போன்றே செயல்படுகின்றனர்.
யெச்சூரியுடன் சந்திப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உடல் நலம் பாதிக்கப்பட்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ மனைக்கு சென்று நலம் விசா ரித்து விட்டு வந்தேன். அவர் உடல் நலம் பெற வேண்டும். ஆக்கப்பூர்வமான அரசியல் பணியாற்ற ஆரோக்கியத்தோடு வர நல்வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
கட்சியின் மாநிலச் செயலா ளர் இரா.முத்தரசன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.