சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜக முயற்சி ! தாம்பரம் பொதுக்கூட்டத்தில் கே.பாலபாரதி குற்றச்சாட்டு
தமிழகம், கேரளாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜக முயற்சித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் கே.பாலபாரதி குற்றம்சாட்டி யுள்ளார். மதுரையில் நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டிற்கு சென்னையிலிருந்து சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் நினைவு சுடர் கொண்டு செல்லப்பட்டது. இந்த நினைவுச் சுடருக்கு தென்சென்னை மாவட்டத்தில் அசோக் பில்லர் முதல் தாம்பரம் வரை நூற்றுக்கணக்கான செந்தொண்டர்கள் இருசக்கர வாகன அணிவகுப்பு நடத்தி வரவேற்பளித்தனர். இதனை யொட்டி தாம்பரத்தில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில், தாம்பரம் பகுதிக்குழு சார்பில் மாநாட்டு நிதியாக ரூ.3 லட்சம் கே.பாலபாரதியிடம் வழங்கப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்டு அவர் பேசிய தன் சில பகுதிகள் வருமாறு தலைநகர் சென்னையில் குடிமனைப்பட்டா, சொந்த வீடின்றி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. குடிமனைப் பிரச்சனைக்காக தினந்தோறும் மார்க்சிஸ்ட் கட்சி போராடுகிறது. இந்த பிரச்சனையை தீர்க்க திமுக அரசு முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும். உழைப்பாளி, பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடுவதும், போராட்ட களத்திற்கு மக்களை கொண்டு வருவதும் சிபிஎம் தான். தரமணியில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை நிர்வாகமும் காவல்துறையும் மறைத்தது. கடும் போராட்டம் நடத்தி பிரச்சனையை வெளியே கொண்டு வந்தது இந்திய மாணவர் சங்கம் தான். பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை அரசு தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை களை எடுக்க வேண்டும். உணவு உரிமை பறிப்பு தமிழகத்தின் நிதி, கல்வி உரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசு, உணவு உரிமையையும் பறிக்கிறது. அரிசிக்கு விதவிதமாக ஜிஎஸ்டி போடுகிறது. விலைவாசி உயர்வுக்கு ஜிஎஸ்டி காரணமாக உள்ளது. செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உணவுப் பொருட்களை வைத்து சந்தையில் சூதாட்டம் நடத்துகின்றனர். இதனை மறைக்க கிலோ 29 ரூபாய்க்கு பாரத் அரிசி வழங்குவதாக கூறுகிறார்கள். ஆனால் எங்கே விற்கிறது என்று தான் தெரியவில்லை. மாநில அரசுக்கு தேவையான அரிசி, சர்க்கரையை ஒன்றிய அரசு தர மறுக்கிறது. கிலோவிற்கு 8.50 ரூபாய் மாநில அரசு கொடுத்து வாங்கி மக்களுக்கு இலவசமாக தருகிறது. சர்க்கரையும் தேவை யான அளவிற்கு ஒதுக்கீடு செய்ய மறுக்கிறது. மக்களின் உணவு உரிமையையும் பாஜக அரசு பறிக்கிறது. மந்தாரை அமித்ஷா அரசியலில் மதம் கலக்க கூடாது, பிறர் மீது திணிக்க கூடாது. இதற்கு மாறாக பாஜக ஆட்சியாளர்கள் செயல்படு கின்றனர். ராமநவமி அன்று தில்லியில் மாமிச கடைகள் திறக்க கூடாது, ஓட்டல்களில் மாமிச உணவு தயாரிக்கக் கூடாது என்று பாஜக அரசு மிரட்டுகிறது. ரம்ஜான் நாளில் ஓதுவதற்கு கூட தடை விதிக்கிறது. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் தினம் தினம் கலவரத்தை உரு வாக்கு கிறது. ராமாயணத்தில் வன்மம், காழ்ப்பு ணர்ச்சியும் கொண்டவள் மந்தாரை. கைகேயி மனதை மாற்றும் மந்தாரையைப் போன்று அமித் ஷாவும் செயல்படுகிறார். மகா ராஷ்டிரா மாநிலத்தை போன்று தமிழகத்திலும் சில கைகேயிகளை பிடிக்க முயற்சிக்கிறார். தமிழகம், கேரளாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்க திட்ட மிடுகின்றனர். இந்த மாநில அரசு களுக்கு எதிரான கருத்துக்களை திட்டமிட்டு உருவாக்குகின்றனர். மார்க்சியமே தீர்வு கடந்த சிபிஎம் அகில இந்திய மாநாட்டில், இந்தியா அணியை உருவாக்குவோம் என எதிர்பார்க்கவில்லை. ஆனால், 303 இடங்களை வைத்திருந்த பாஜ கவின் எண்ணிக்கையை இந்தியா அணி மூலம் குறைத்தோம். அந்த வகையில் மதுரை மாநாடும் பங்காற்றும். மக்களின் பிரச்ச னைகளுக்கு ஒரே தீர்வு மார்க்சியம் தான் என்றார் குன்றக்குடி அடிக ளார். சோசலிச குடியரசு இந்தியா என்பதை உண்மையான சோசலிச நாடாக மாற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார். இந்தக் கூட்டத்திற்கு தாம்பரம் தொகுதிச் செயலாளர் தா. கிருஷ்ணா தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.வாலண்டினா, எஸ்.நம்புராஜன், கே.ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.விஜயா, தொகுதிக்குழு உறுப்பி னர்கள் ஆர்.பி.கோவிந்தன், யு.அணில்குமார், தாம்பரம் வடக்கு கிளைச்செயலாளர் வி.பாஸ்கர் உள்ளிட்டோர் பேசினர்.