சென்னை, ஜூன் 21- சென்னையில் முக நூலில் அவதூறு கருத்து களை பதிவிட்டதாக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
சென்னை நங்கநல்லூர் கன்னிகா காலனி பகுதி யில் பகுதியில் வசிப்பவர் கோகுல் நாயுடு (43). இவர் பாஜகவின், சென்னை கிழக்கு மாவட்ட செயலாள ராக உள்ளார். கோகுல் நாயுடு, தனது முகநூல் பக்கத்தில், இஸ்லாம் மார்க்கம் குறித்து அவதூ றான கருத்துகளை அண்மை யில் பதிவிட்டதாக கூறப்படு கிறது.
இதுகுறித்து இந்திய தேசிய லீக் கட்சியின் துணைப் பொதுச் செய லாளர் ஒய்.எஸ். ரஹமதுல்லா என்பவர், பழ வந்தாங்கல் காவல் நிலை யத்தில் கோகுல் நாயுடு மீது புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசா ரணை செய்தனர். விசார ணையில் கோகுல் நாயுடு மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து காவல் துறையினர் கோகுல்நாயுடு மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை வெள்ளிக் கிழமை கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை, ஜூலை 1ஆம் தேதி சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கோகுல்நாயுடு புழல் சிறையில் அடைக்கப் பட்டார்.