tamilnadu

தோல்வி பீதியால் அமலாக்கத்துறையை ஏவும் பாஜக

சென்னை, மார்ச் 22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ் நாடு மாநிலச் செயலா ளர் கே. பாலகிருஷ்ணன் விடுத் துள்ள அறிக்கை: மோடி அரசாங்கத்தின் மோச மான செயல்பாடுகள், தேர்தல் பத்  திர ஊழல்கள் அம்பலமாகி மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் அதிருப்தியினால் பாஜகவும், மோடியும் பீதியில் உள்ளனர்.

இதனை திசைத் திருப்பும் நோக்  கில் தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி  கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பா ளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்  ளது. மோடி அரசின் இந்த அரசியல்  பழிவாங்கும் நடவடிக்கையினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்  மையாக கண்டிக்கிறது. இந்த கைது  நடவடிக்கைக்கு எதிராக நடை பெறும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி அணிகளும் பங்  கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இந்திய அரசியலமைப்பு மற்  றும் ஜனநாயகத்தை பாதுகாக்க வும், வரும் தேர்தலில் மோடி அர சாங்கத்தை தோற்கடிக்க வேண்டு மென்ற ஒற்றைக் குறிக்கோளோடு உறுதிபூண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர்களைக் குறிவைத்து கைது செய்வது இதன் மூலம் தெளி வாகிறது.

தேர்தல் நடைபெறும் நேரத்திலேயே பாஜகவினர் அறி விக்கப்படாத அவசர நிலைப் பிர கடனம் போல் பாசிச பாணி நட வடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்றால் இன்னும் மோசமான நட வடிக்கைகளை மேற்கொண்டு மக்  கள் மீதும், ஜனநாயகத்தின் மீதும்  கொடூரமான முறையில் தாக்குதல்  மேற்கொள்வார்கள்.

எனவே, வரும் மக்களவைத் தேர்தல் பாசிசத்திற்கும் - ஜனநாய கத்திற்கும் இடையே நடைபெறும் மிக முக்கியமான தேர்தலாகும். இத்தேர்தலில் பாஜகவை படு தோல்வியடையச் செய்து, மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி கேட்டுக் கொள்கிறது.