tamilnadu

img

கொலை, கொள்ளையில் ஈடுபட்டவருக்கு பா.ஜ.கவில் மாவட்ட இளைஞரணி பதவி

ம.ரெட்டியபட்டி  (அருப்புக்கோட்டை), மே 3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் தீக்கதிர் முதன்மைப் பொதுமேலாளராகவும் பொறுப்பு வகித்த தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் ஞாயிறன்று காலமானார். அவரது இறுதி நிகழ்ச்சி திங்களன்று அவரது சொந்த ஊரான ம.ரெட்டியபட்டியில் மாலை 5.45 மணிக்கு நடை பெற்றது. அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் அர்ஜூனன் தலைமை வகித்தார். தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  ஆற்றிய இரங்கல் உரையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிகப்பெரும் சிந்த னையாளரை, மார்க்சிய வாதியை, பேரன் பிற்கும், பெருமைக்கும் உரிய தலைவரை இழந்துவிட்டது. விருதுநகர் மாவட்டம் மட்டு மல்ல தமிழகம் முழுவதும் செங்கொடி இயக்கத் தையும் அதன் கொள்கைகளையும் கொண்டு சேர்த்தவர். அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் மட்டும்  வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டுச் செல்லவில்லை.

 தமிழக அரசியலிலும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டார். இளைஞர்களை கொள்கை ரீதியாக, தத்துவார்த்த ரீதியாக வளர்த்தவர். தத்து வங்கள் மீதும் இயக்கத்தின் மீதும் பற்றுக் கொண்ட கொள்கையாளர்களுக்கு என்றும் மரணமில்லை. அவர் ஏற்றுக் கொண்ட சித்தா ந்தம் என்றும் நிலைத்து நிற்கும். அவரது பணியை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லுங்கள். கட்சிக்கு மட்டுமல்ல தீக்கதிர் பத்திரிகை யின் வளர்ச்சியிலும் அவர் தீவிர கவனம் செலுத்தி வந்தார். பத்திரிகையின் முதன்மைப் பொது மேலாளர் என்ற முறையில் தீக்கதிர் அலுவல கத்தில் மே தினக் கொடியை ஏற்றியுள்ளார். எம்.என்.எஸ். இறுதி நடை தீக்கதிரை நோக்கி இருந்தது என்பதைக் கேட்டபோது  அவர் மிகச் சிறந்த அர்ப்பணிப்பாளர் என்பது நிரூபண மாகியுள்ளது. மிகச் சிறந்த ஆளுமையை இழந்து தவிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துயரத்தில் திமுக-வும் இணைந்துள்ளது. என் சார்பிலும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பிலும் என  அஞ்சலியை உரித்தாக்குகிறேன் என்றார்.

கே.பாலகிருஷ்ணன்

கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:- எம்.என்.எஸ். மரணம் அவரது குடும்பத்தி னர், உறவினர்கள், கட்சியினரை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டது. அவரது மறைவால் ஏற்பட்டுள்ள காயத்திற்கு  காலம் என்ற அரு மருந்து தான் சிறந்த பலனளிக்கும். பள்ளிப்படிப்பை சொந்த ஊரில் முடித்து, கோவில்பட்டியில் பியுசி முடித்து, தூத்துக் குடியில் மண்ணியல் பட்டப்படிப்பை முடித்து  இடதுசாரி இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டு இந்திய மாணவர் சங்கம், கட்சியின் அருப்புக்கோட்டை தாலுகா செயலாளர், விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர்,

மாநி லக்குழு உறுப்பினர், மாநிலச் செயற்குழு உறுப்பினர் என தமது 65 ஆண்டுகால வாழ்வில் 45 ஆண்டுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காகவே ஒப்புக்கொடுத்தவர். தமுஎகச, மாணவர், மாதர், வாலிபர் அரங்கங் களுக்கு பொருத்தமான தோழர்களைக் கண்ட றிந்து அவர்களுக்கு தத்துவார்த்தப்பயிற்சி, போராட்டக் கள அனுபவங்களை கற்றுக் கொடுத்து கட்சியின் உயர் பொறுப்புக்கு அழைத்துவந்தவர் எம்.என்.எஸ். தீக்கதிர் பொறுப்பு, பல்வேறு மாவட்டங் களின் பொறுப்பாளராக மட்டுமல்லாமல் சிறந்த  வழிகாட்டியாக இருந்தவர். எந்த ஒரு பிரச்ச னை எழுந்தாலும் அதை நுணுக்கமாக அணுகி சாதுர்யமாக அதில் வெற்றி காண்பார். அந்த வெற்றியை அவர் கட்சிக்குக் கிடைத்த வெற்றி என பெருமிதம் கொள்வார். மார்க்சிய சிந்தனையாளரான எம்.என்.எஸ். மிகவும் எளிமையானவர். தம்மை முன்னிறுத்திக் கொள்ளாமல் கட்சி, இயக்கத்தின் கொள்கை களுக்கே முன்னுரிமை கொடுப்பார். சிறந்த கம்யூனிஸ்ட்டுக்கான அனைத்துக் குணங்களை யும் கொண்டவர் எம்.என்.எஸ். எம்.என்.எஸ் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றைக்கும் பக்கபலமாக, உறுதுணையாக இருக்கும். அவரது வாழ்க்கை யை ஒரு படிப்பினையாக, பாடமாக எடுத்துக் கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சியங்களை முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.

ஜி.ராமகிருஷ்ணன்

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் பேசுகையில், ஒரு பின் தங்கிய கிராமத்திலிருந்து கட்சியின் உயர்பொறுப்புக்கு வந்த தோழர் என்.என்.எஸ் ஊருக்கு வரவேண்டு மென நான் பலமுறை முயற்சித்தேன், கட்சிப் பணிகள் காரணமாக வர இயலவில்லை. கடைசி யில் அவரது இறப்பிற்காக ம.ரெட்டியபட்டி வந்துள்ளதை நினைத்து நான் துயரமடைகிறேன் என கண் கலங்கினார். தொடர்ந்து பேசிய அவர், கட்சி உறுப்பினர்களை அடையாளம் கண்டு, அவர் களை முழு நேர ஊழியராக மாற்றுவதற்கு பயிற்று விப்பதில் வல்லவர். கருத்தியல் தளத்தில் மட்டு மல்ல. களப் பணியிலும் எம்.என்.எஸ் முத்திரை  பதித்துள்ளார். தன்னடக்கம் மிகுந்த அவர் எவ்வளவு சிரமம் இருந்தாலும் கட்சி சொல்லும்  பணியை மகிழ்வுடன் ஏற்று நிறைவேற்றுவார் என்றார். தீக்கதிர் ஆசிரியரும் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான மதுக்கூர் இராம லிங்கம் பேசுகையில், “எம்.என்.எஸ் மறைந்தார் என்பது கனவாகி விடக்கூடாதா.  பல  பொய்ச் செய்திகளைப் போல் இதுவும் பொய்ச்  செய்தி ஆகிவிடக் கூடாதா. இயக்கத்தை, கொள்கையை, லட்சியத்தை முன்னிறுத்திய எம்.என்.எஸ் மறைவால் வெறுமை சூழ்ந்து விட்டது. தாங்க முடியாத வேதனையில் தவிக்கும் நம்மை காலம் என்ற மருந்தால் தான் ஆற்ற முடியும்” என்றார்.

கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஏ.பெருமாள் பேசுகையில், “ மாமா என்று அழைத்த எனது மரு மகனை தோழர் என அழைக்க வைத்து அவனை  மார்க்சிஸ்ட்டாக மாற்றினேன். எம்.என்.எஸ் ஒரு  தலை சிறந்த வாசிப்பாளன், எப்போதும் பை நிறைய புத்தகங்களை சுமந்து கொண்டு தான் வருவான். நாட்டை பெரும் துயர் சூழ்ந்துள்ள நிலையில், எம்.என்.எஸ் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பு. எம்.என்.எஸ் விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து முன்னெ டுத்துச் செல்வது தான் அவருக்கு செய்யும் சிறந்த அஞ்சலியாகும்” என்றார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகை யில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் எம்.என்.எஸ் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார், எந்த ஒரு பிரச்சனையையும் நளின மாக எடுத்துக்கூறுவார். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது” என்றார். சிஐடியு மாநிலச் செயலாளர் ஜி.சுகுமாறன் பேசுகையில், “எம்.என்.எஸ் ஒரு சிறந்த நிர்வாகி, யாரையும் கடிந்து பேச மாட்டார். எந்த பிரச்ச னையையும் மிகவும் நுணுக்கமாக ஆழமாக விவாதிப்பார். அவரது தத்துவார்த்த விளக்கங் கள் தொழிற்சங்கத்தின் வளர்ச்சிக்கும் உதவின.  அவரது இழப்பு தொழிலாளி வர்க்கத்திற்கு பேரிழப்பு” என்றார்.

மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் தனது இரங்கல் உரையில்,” கடைசி யாக மே தினத்தன்று காலை நான் அவரைத் தொடர்பு கொண்டு மே தின வாழ்த்து தெரி வித்தேன். அப்போது தீக்கதிர் அலுவலகத்தில் கொடியேற்றச் செல்கிறேன் என்றவர் அன்றைய தினமே மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதை என் மனம் ஏற்க மறுக்கிறது. கட்சி, இயக்கம், கொள்கைக்காகவே வாழ்ந்தவர் எம்.என்.எஸ். இயக்கத்திற்காக தம்மை ஒப்புக் கொடுத்தவர். சமூக அடுக்குகளைப் பற்றி கற்றுக் கொடுத்த மார்க்சிய அறிஞர்” என்றார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் பி.சுகந்தி பேசுகையில், “எம்.என்.எஸ் மார்க்சிய ஆசிரியர் மட்டுமல்ல. அவர்  ஒரு தகவல் களஞ்சியம். நடமாடும் “கூகுள்”. எந்த  விஷயம் குறித்துக் கேட்டாலும் தெரிந்தால் உடனே பதிலளிப்பார். இல்லையெனில் பத்து  நிமிடங்கள் கழித்துப் பேசுங்கள் என்று கூறுவார். மீண்டும் தொடர்பு கொள்ளும் போது முழுமை யாக தகவல்களை அளிப்பார். அறிவொளி இய க்கத்தை விருதுநகர் மாவட்டத்தில் வெற்றிகர மாக நடத்தியவர். அதன் மூலம் பல தோழர் களை கட்சிக்கு அழைத்து வந்தவர்” என்றார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பால பாரதி பேசுகையில் “பெண் தோழர்களை கட்சிக்கு கொண்டு வந்ததில் எம்.என்.எஸ்-க்கு பெரும் பங்குண்டு. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் அதிக பெண் தோழர்களை கட்சி க்கும், வெகுஜன அரங்கத்திற்கும் கொண்டு வந்த வர். அமைதியும், தன்னடக்கமும் மிக்கவர்” என்றார். சிபிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் தி.ராம சாமி பேசுகையில், “எம்.என்.எஸ் சிறந்த தத்து வார்த்த வாதி, கொள்கையின் இலக்கணம், சரி யெனப்படும் கருத்துக்களை உரக்கச் சொல்பவர்” என்றார்.