tamilnadu

புலனாய்வு அமைப்புகளை பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறது

சென்னை, நவ. 25- தெலுங்கானாவில் வரும் 30ஆம்  தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ்  மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தனது எக்ஸ் சமூக வலை தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

மத்திய புலனாய்வு அமைப்பு களை ஆளும் பாஜக தனக்கு சாதக மாக பயன்படுத்திக் கொள்கிறது. இத்தகைய அமைப்பினர் தெலுங் கானாவில் குறைந்தது 4 காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்தல் பிரச்சாரத்தின் போது விசாரணைக்கு அழைத்ததுடன், அவர்களின் வீடு களில் சோதனை நடத்தி உள்ளனர்.

ஆனால் இதுவரை பா.ஜனதா வேட்பாளர் யாரையும் புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வில்லை.  இதன்மூலம் புலனாய்வு அமைப்பு களை தவறாக பயன்படுத்துவது வெளிப்படையாக தெரிகிறது என்று கூறியுள்ளார்.