tamilnadu

img

மிதிவண்டிகள் தரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது’ அரசு விளக்கம்

சென்னை, ஜூன் 30- மிதிவண்டிகள் வழங்கும் திட்  டத்தின் கீழ் வழங்கப்படும் மிதி வண்டிகள் தரம் குறித்து வெளி வந்த செய்தி குறித்து சட்டமன்றத்  தில் எதிரொலித்தது. இந்த நிலையில் அந்த பத்தி ரிகை செய்திக்கு அரசு தரப்பில் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு: மாணவர்கள் நலன் கருதி ஆண்டு தோறும் இலவச மிதி வண்டிகள் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக  அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில்   11 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து  மாணவர்களுக்கும் தோராய மாக 5 லட்சம் மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றது. இந்த அரசு பொறுப்பேற்று, கடந்த 3 ஆண்டுகளாக 16,73,374 தரமான மிதிவண்டிகள் வழங்  கப்பட்டுள்ளன. மிதிவண்டிகள் ஒப்பந்தப்புள்ளி சட்ட விதிமுறை களின்படி கொள்முதல் செய்யப் படுகிறது.

மிதிவண்டிகள் தரம் இரண்டு நிலைகளில் உறுதி செய்யப்படுகிறது.   மிதிவண்டிகளை கிண்டியில்  உள்ள ஆய்வு நிறுவனத்தில் முழு மையாக ஆய்வு செய்யப்பட்டு  தர அறிக்கை பெறப்படுகிறது. அதன் பின்னர் நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப் படுகிறது. மாணவர்களுக்கு மிதி வண்டிகள் வழங்கப்படுவதற்கு முன்பாக, மிதிவண்டிகள் Specificationgo தரமாக உள்  ளது என்று  உறுதி செய்யப்படு கிறது.

இச்செய்தி குறித்து கோயம் புத்தூர் மாவட்ட ஆட்சியர்,  மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் தலைமையில் குழு அமைத்து கள ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளார். இந்த அறிக்கையின்படி செல்வபுரம், மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாண வர்கள் தங்களுக்கு வழங்கப் பட்ட மிதிவண்டிகள் பயனுள்ள தாக இருப்பதாகவும், நல்ல  நிலையில் அதனை பயன்படுத்து வதாகவும் தெரிவித்துள்ளார். மிதிவண்டி தரம் சார்ந்து எவ்வித புகாரும் பெறப்படவில்லை என வும் மிதிவண்டிகளை தனியார்  களுக்கு விற்பனை செய்ததாக  மாணவர்களால் தெரிவிக்கப்பட வில்லை எனவும் குறிப்பிட்டுள் ளார்.

நாளிதழில் வெளிவந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள கடை  ஆய்வு செய்யப்பட்டதில், அங்கி ருந்த சில மிதிவண்டிகள் சிறு பழுதுகளை சரி செய்வதற்காக மாணவர்களால் கடையில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பழுது நீக்கம் செய்யப்பட்ட பின்  மாணவர்கள் பெற்றுச் செல்வார்  என்றும், அவை விற்பனை  செய்வதற்காக வைக்கப்பட் டவை அல்ல என்று தெரிய வரு வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இலவச மிதிவண்டிகள் வழங்  கும் திட்டம் சிறப்பாக செயல்  படுத்தப்படுகிறது.   மாணவ  மாணவியருக்கு தரமான மிதி வண்டிகள் வழங்கப்படுகின்றது. எனவே பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தி முற்றி லும் உண்மைக்குப் புறம்பான செய்தியாகும் . இவ்வாறு அதில் தெரிவிக்கப்  பட்டுள்ளது.