tamilnadu

img

வங்கி ‘காசோலை செலுத்தும் இயந்திரம்: ஐஓபி அறிமுகம்

சென்னை,மே 30 இந்தியன் ஒவர்சீஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட, சிறப்பான சேவைகளை வழங்கும் நோக்கில், ‘வாடிக்கையாளர்க்கு முன்னுரிமை’ என்ற தனது கொள்கையின் அடிப்படையில், தானியங்கி காசோலை செலுத்தும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் ’தானியங்கி காசோலை செலுத்தும் இயந்திரங்கள்’, முக்கிய வர்த்தக மையங்களில் நிறுவப்பட்டுள்ளன, இதனால் இந்தியன்ஒவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்கள் இனி எந்நேரத்திலும் தங்களது காசோலையை செலுத்தி, அதற்கான ஒப்புதலைப் பெறமுடியும்.சென்னையில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆர். கிருஷ்ணகுமார் முதல் தானியங்கி காசோலை செலுத்தும் இயந்திரம் தொடங்கி வைத்தார்.வர்த்தகர்கள் தங்களுடைய காசோலையை ஒரு நாளில் எந்நேரமும் செலுத்தும் வாய்ப்பை அளிக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் வங்கி கிளையின் பணி நேரத்திற்குள் சென்று காசோலையை டெபாசிட் செய்ய வேண்டும் என்ற சிரமத்திற்கு சிறந்த தீர்வாக அமைந்திருக்கிறது.