tamilnadu

img

இமாச்சல் பிரதேசத்தில் பாராகிளைடிங்கிற்கு தடை

இமாச்சல் பிரதேசத்தில் பாராகிளைடிங்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இமாச்சல் பிரதேசத்தில் கடந்த 8 ந் தேதி  கங்ரா மாவட்டத்தின் பிர் பகுதியில் பாரா கிளைடிங் சாகசத்தின்போது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து பேரிடர் மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் பாராகிளைடிங் அங்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கங்ரா மாவட்டத்தின் துணை காவல் ஆணையர் நிபுன் ஜின்டால் தெரிவித்துள்ளார்.