tamilnadu

போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது

வேலூர், ஏப்.4 - 


வேலூர் மாவட்டம் ரத்தினகிரி அருகே உள்ள பூஞ்சோலை நகர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (எ) பாலகணேசன் (16). இவர், கடந்த 31-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த இரண் டரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக, குழந்தையின் பெற்றோர் ரத்தினகிரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், வழக்குப் பதிந்த போலீஸார், போக்ஸோ சட்டத்தின்கீழ் பாலாஜியை கைது செய்தனர்.

;