tamilnadu

img

பி.எட். கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகம் எச்சரிக்கை

சென்னை, செப்.3- ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வெளிமாநில மாணவர்கள் நேரடி தேர்வுகளுக்கு வரவில்லை என புகார் வந்துள்ளது. வெளி மாநிலங்களில் இயங்கும் மாணவர் சேர்க்கை மையம் வாயிலாக தேர்வு எழுதாமல் தேர்ச்சி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வகுப்புக்கு வராத வரை தேர்வு எழுத வைத்தால் பி.எட். கல்லூ ரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

வரும் காலங்களில் பி.எட். கல்லூரிகளில் முன்னறிவிப்பின்றி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளோபல் அகாடமி என்ற நிறு வனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப் பட்ட நிலையில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பி.எட். கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.