புதுச்சேரி, மே 8- ஆட்டோ தொழிலாளர்களுக்கு மத்திய மாநில அரசுகள் ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ உரி மையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி காந்திவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 45 நாட்களுக்கும் மேலாக வாழ்வாதா ரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்க ளுக்கு மத்திய அரசு
15 ஆயிரம் ரூபாயும், மாநில அரசு 5 ஆயி ரம் ரூபாய் நிவாரணம் மற்றும் மளிகை பொருட்கள் வழங்க வேண்டும். ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதும் பொது போக்குவரத்திற்கு இன்னும் கட்டு பாடுகள் நீடிப்பதால் ஆட்டோ ஓட்டுநர்க ளின் வாழ்வாதரம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. எனவே ஆட்டோக்களுக்கு தகுதி சான்றி தழ் பெறுவது, இன்சூரன்ஸ் சாலைவரி, வாக னக் கடன் மற்றும் இதர கட்டணங்கள் ஆகிய வற்றை குறைந்தபட்சம் 1 வருடத்திற்கு ரத்து செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் மீதான வரி உயர்வை திரும்பபெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத் தில் பேசியவர்கள் வலியுறுத்தினர். பொதுச்செயலாளர ரவிக்குமார் தலை மையில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் கவுரவத் தலைவர் தா.முருகன், சிஐடியு பிர தேச தலைவர் கே.முருகன், செயலாளர் சீனு வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதுவை முழுவதும் உளள சிஐடியு ஆட்டோ சங்க கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.