tamilnadu

img

சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதலுக்கு கண்டனம்

திருநெல்வேலி சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகம் மீது சாதி வெறியர்கள் நடத்திய தாக்குதலை கண்டித்து வியாழனன்று (ஜூன் 20) காஞ்சிபுரம் ஆலடிகேட் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் காஞ்சிபுரம் நகரக்குழு உறுப்பினர் ஜி.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.நேரு ஆகியோர் பேசினர். ஆர்.மதுசூதனன், டி.ஸ்ரீதர், வி.சிவப்பிரகாசம், எஸ்.சினிவாசன், ஜி.எஸ்.வெங்கடேசன்,  சி.மகேந்திரன், ஆர்.சேகர், கே.ஜீவா, எம்.சூரியபாரதி, இ.சங்கர் , இ.சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.