tamilnadu

துணை சுகாதார நிலையத்தில் மரங்கள் வெட்டி கடத்தல்

 ஆம்பூர், நவ.24- ஆம்பூர் அருகே உள்ள வீராங்குப்பத்தில் துணை சுகாதார நிலையம் உள்ளது. இதன் வளாகத்தில் புங்கை மரம் மற்றும் வேப்ப மரங்கள் உள்ளன. இந்த மரங்களை சில சமூக விரோதிகள் சிலர் இரவு நேரத்தில் வெட்டி கடத்த முயற்சித்துள்ளனர்.  இதுகுறித்து ஊர் பொது மக்கள் வருவாய் துறையின ருக்கும், வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவ லர் ஜமுனா, மேல்சாணா ங்குப்பம் வருவாய் ஆய்வாளர் பத்மநாபன் ஆகி யோர் மரங்கள் வெட்டிய பகுதிகளை பார்வையிட்டு விசாரணை செய்தனர். மேலும் துணை சுகாதார நிலையத்தில் மரங்களை வெட்டியது குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.