tamilnadu

img

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை

சென்னை:
சென்னை அருகே எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ஞாயிறன்று மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், திங்களன்று ஒரு மாணவர் அதே பாணியில் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டை அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனுஷ் செளத்ரி என்ற மாணவர், ஈ.சி.ஈ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.விடுதியில் தங்கி படித்து வந்த அவர் திங்கள் காலை 2 ஆவது மாடியில்இருந்து கீழே குதித்தார். இதில் சம்பவஇடத்திலேயே அனுஷ் செளத்ரி உயிரி
ழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலைநகர் போலீ சார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுதொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஞாயிறன்று பொன்னேரியை சேர்ந்த பிடெக் 3ஆம் ஆண்டு மாணவி அனுப்பிரியா, கல்லூரியின் 10 ஆவது மாடி யில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவி தற்கொலை செய்து கொண்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாணவர்கள் இதுபோல் தொடர்ந்து விபரீத முடிவுகளை எடுக்க என்ன காரணம்? என விசாரணை மேற் கொண்டு வரும் மறைமலைநகர் போலீசார், உண்மையை நிச்சயம் வெளிக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதி கூறியுள்ளனர்.

;