சென்னை, மார்ச் 17- கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கொரோனா குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பயணிக ளுக்கு தீவிர காய்ச்சல் பரி சோதனை. காவல் துறை யினர், பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு தீவிர காய்ச்சல் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தினசரி ஆயிரக்கணக்கா னோர் வந்து செல்லும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கொரோனா முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக உடல் வெப்பநிலையை கண் டறியும் கருவி மூலம் சோதனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை சென்னையில் பல்வேறு இடங்களில் சுகாதாரத் துறை யினர் மேற்கொண்டு வரு கின்றனர். அதன் ஒருபகுதி யாக சென்னை கோயம் பேடு பேருந்து நிலையத்தில் 2 இடங்களில் மருத்துவ முகாம் அமைத்து முன் னெச்சரிக்கை நடவடிக்கை யாக பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதா ரத்துறை சார்பில் வெளியூர் செல்பவர்களுக்கு காய்ச் சலை கண்டறியும் சோதனை தொடர்ச்சியாக நடத்தப்படு கிறது. சோதனையில் குடும்பத் துடன் பெரம்பலூர் செல்வ தற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்தபோது சென்னை பெருங்குடியை சேர்ந்த வசந்த் என்ற சிறுவனுக்கு காய்ச்சல் அறிகுறி இருப் பது தெரிய வந்தது. இதை யடுத்து 108 ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு ரத்த மாதிரி பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் தனிமைப்ப டுத்தப்பட்டு ரத்த மாதிரி பரி சோதனை செய்யப்படும் என மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். காய்ச்சல் பரிசோதனை முடிந்த பிறகே பயணிகள் வெளியூர் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.