tamilnadu

பரிசோதனை முடிவு தெரியும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை, ஜூன் 29- பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பரி சோதனை மையங்களில் கொரோனா பரிசோதனை செய்துகொள்வோர், முடிவு வரும் வரையில் தங் களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், தொற்று உறுதி  செய்யப்பட்டால் அவரும்,  அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்ப டுத்தப்படுவார்கள் என்று ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாந கராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் பரிசோதனை மையங் களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்து கொள்வோர், முடிவு கள் வரும் வரையில் வீட்டில்  கட்டாயம் தனிமைப்படுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி  செய்யப்பட்டால், சம்பந்தப் பட்ட நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் 14 நாட்கள் தனிமைப்ப டுத்தப்படுவார்கள். தொற்று கண்டறியப்பட்டவர் மருத்து வமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு அவர்க ளுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மருத்துவரின் ஆலோச னைப்படி, மருத்துவமனை, கோவிட்-19 பாதுகாப்பு மையங்கள் அல்லது அவர் களின் வீடுகளில் தனிமைப்ப டுத்தப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.