சென்னை, டிச. 2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளராக எம். ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட மாநாடு மணலியில் தோழர் என். சங்கரய்யா, சீத்தாராம் யெச்சூரி நகரில், தோழர்கள் பி.என். உண்ணி, சு. லெனின் சுந்தர், ஜெ. மோகனசுந்தரி நினை வரங்கில் டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். ஜெயரா மன், மாவட்டக்குழு உறுப் பினர்கள் பா. விமலா, ஏ.ஆர். பாலாஜி ஆகியோர் தலை மை வகித்தனர். மாநில செயற் குழு உறுப்பினர் ப. செல்வ சிங் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார். மாநிலக் குழு உறுப்பினர் ப. சுந்தர ராசன் வாழ்த்திப் பேசினார். மத்தியக்குழு உறுப்பி னர் பி. சம்பத் மாநாட்டில் நிறைவுரையாற்றினார்.
புதிய மாவட்டக்குழு தேர்வு
35 பேர் கொண்ட மாவட் டக் குழுவும், 11 பேர் கொண்ட மாவட்டச் செயற் குழுவும் தேர்வு செய்யப் பட்டன. மாவட்டச் செயலா ளராக எம்.ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப் பினர்களாக எல். சுந்தர ராஜன், எஸ்.கே. மகேந்திரன், டி.கே. சண்முகம், வி. ஜானகிராமன், ஆர். லோக நாதன், அ. விஜயகுமார், எஸ்.ராணி, கே. எஸ். கார்த்தீஷ்குமார், எஸ். பாக்கியலட்சுமி, எல்.பி. சரவணத்தமிழன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்
ரசாயன தொழிற்சாலை களின் மிகப்பெரிய ஆபத்தில் இருந்து வட சென்னையை மீட்க வட சென்னைக்கென்று ஒருங்கி ணைந்த சுற்றுச்சூழல் கொள்கை உருவாக்க வேண்டும்; சென்னை மாநக ரில் போக்குவரத்து நெரி சலைக் குறைக்க பொதுப் போக்குவரத்தை பலப்படுத்த வேண்டும்; அரசு மருத்துவ மனைகளை மேம்படுத்தி புதியமருத்துவமனைகளை உருவாக்க வேண்டும்; வட சென்னையில் 3-இல் ஒரு பகுதி மாணவர்கள் உள்ள தால் ஏற்கெனவே செயல் படும் மைதானங்களில் கிரிக்கெட், கால்பந்து உள்ளி ட்ட விளையாட்டு உபகரணங் களை வழங்கவேண்டும்; புதிய விளையாட்டு மைதா னங்களையும், உடற்பயிற்சி கூடங்களை யும் அமைக்க வேண்டும்; நீதிமன்ற தீர்ப்பை காரணம்காட்டி குடியிருப்புகளை இடித்து அகற்றக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மான ங்கள் நிறைவேற்றப்பட்டன.