tamilnadu

img

சமூக மாற்றத்திற்காக தனது எழுத்தை அர்ப்பணித்தவர் கலை இலக்கியா

தேனி, மே 20-சமூக மாற்றத்திற்காக தனது எழுத்தை அர்ப்பணித்தவர் “கலை இலக்கியா”என தமுஎகச புகழாரம் சூட்டியுள்ளது.தமுஎகச மாநிலக்குழு உறுப்பினரும், கவிஞருமான கலை இலக்கியா மறைவையொட்டி தேனியில் தமுஎகச சார்பில் ஞாயிறன்று புகழஞ்சலி கூட்டம் நடைபெற் றது.நிகழ்ச்சிக்கு மாவட்டத் துணைத்தலைவர் தேனி சீருடையான் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில் .கலை இலக்கியாவின் உருவப்படத்தை திறந்துவைத்து தமுஎகச மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சன்யா உரையாற்றினார்.“கலை இலக்கியாவின் படைப்பு மனம்” என்னும்தலைப்பில் பேசிய தமிழ்இந்து முதன்மை இணை ஆசிரியர் மு.முருகேஸ் கலை இலக்கியா குறித்து கடந்த கால நினைவுகளை எடுத்துரைத்தார். “கலை இலக்கியாவின் படைப்புலகம்” என்னும் நூலினை தமுஎகச(அறம்) ஒருங்கிணைப்பாளர் அ.உமர்பாரூக் வெளியிட தமுஎகச மாவட்டச் செயலாளர்அய்.தமிழ்மணி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் தமுஎகசமாநில துணைச் செயலாளர்கள் லட்சுமிகாந்தன், ஸ்ரீரசா, மாநில செயற்குழு உறுப்பினர் ம.காமுத்துரை, மாநிலக்குழு உறுப்பினர் மோகன் குமாரமங்கலம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சு.வெண்மணி, பொறியாளர் எஸ்.எஸ்.பொன்முடி, பேரா.தமிழ்செல்வி உள் ளிட்டோர் பேசினர். கவிஞர் வீரா ,தங்கேஸ்வரன் ஆகியோர் கவிதை வாசித்தனர் .மாநிலக்குழு உறுப்பினர் நாகை காவியன் கவிதையை திரைக்கலைஞர் மகாலட்சுமி வாசித்தார் .நிகழ்வில் விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன் ,சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.ராமச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் பா.ராமமூர்த்தி மற்றும் கலை இலக்கியாவின் கணவர் காமுத் துரை, தந்தை சன்னாசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.