tamilnadu

ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது

சென்னை, ஜூலை 7-  ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள  கட்சியின் அலுவலக வளாகத்தில் அடக்கம்  செய்ய அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்  தில் சனிக்கிழமை (ஜூலை 6) மனு தாக்கல்  செய்யப்பட்டது. இதுதொடர்பான கோரிக்கை மனுவை ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியும் வழக்கறிஞருமான பொற்கொடி தரப்பில் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் அளிக்கப்பட்டது இந்த கோரிக்கை தொடர்பாக அவசர மாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொற்கொடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதி பதி(பொ) அரங்க.மகாதேவனிடம் முறையி டப்பட்டது.

 இந்த மனுவை தனி நீதிபதி ஒருவர் விசா ரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி உத்தர விட்டார். இந்த வழக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7) காலை 9:30 மணிக்கு காணொலி மூலம் நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது, “மயானம் என அறிவிக்கப் பட்ட பகுதியில்தான் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்க செய்ய முடியும். சட்டப்படி குடியிருப்புப் பகுதிகளில் அடக்கம் செய்ய முடியாது. ஆம்ஸ்ட்ராங்கின் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது.

2,400 சதுர அடி நிலத்தை அரசு வழங்குகிறது அல்லவா? வேறு பெரிய இடம்  இருந்தால் சொல்லுங்கள் உத்தரவிடுகி றேன்” என்று தெரிவித்து இவ்வழக்கின் விசா ரணையை ஜூலை 7காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தார். இதனைத் தொடர்ந்து, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வி. பவானி சுப்பராயன், “ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய மனுதாரர் தெரிவிக்கும் புதிய  இடமும் குடியிருப்பு பகுதியாகும், ஆம்ஸ்ட்ராங் உடலை அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்வது நல்லது,

நாளை  பள்ளிகள் திறக்கவுள்ளதால் இன்றே உடலை  அடக்கம் செய்ய வேண்டும்” என்று தெரி வித்து வழக்கின் விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதைத் தொடர்ந்து, இவ்வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. பவானி சுப்பராயன் வழங்கினார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகேயுள்ள பொத்  தூரில் அவரது உடலை அடக்கம் செய்து கொள்ளலாம். போதுமான காவல்துறை பாது காப்பு வழங்க வேண்டும் என்றார்.

இறுதி ஊர்வலம்-அடக்கம்

இதைத் தொடர்ந்து பொத்தூருக்கு ஜூலை 7 ஞாயிறன்று மாலையில் ஆம்ஸ்ட்  ராங் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப் பட்டது. இறுதி ஊர்வலத்தில் கட்சி நிர்வாகி கள், தொண்டர்கள், உறவினர்கள் மற்றும்  மக்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  பங்கேற்றனர்.