tamilnadu

img

ஏப்.23 தலைமைச் செயலகம் முற்றுகை ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

ஏப்.23 தலைமைச் செயலகம் முற்றுகை: ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க கோரி ஏப். 23 அன்று தலைமைச் செய லகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு அறி வித்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் புதனன்று (ஏப்.16) செய்தியாளர்களிடம் கூறியதாவது: மீட்டர் கட்டணம் 12 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது. எனவே, மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி,  முத்தரப்பு குழு அமைத்து, விலைவாசி உயர்வுக்கேற்ப அறிவியல் பூர்வமான முறையில் கட்டணத்தை உயர்த்த வேண்டும். ஆட்டோ செயலியை அரசே உரு வாக்க வேண்டும், ஆன்லைன் அபராதத்தி லிருந்து ஆட்டோக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும், சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் பைக் டாக்சியை முறைப்படுத்த வேண்டும்.புதிய ஆட்டோ வாங்க ரூ.10 ஆயிரம்  மானியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வரு கிறோம்.இதன் தொடர்ச்சியாக,  சட்ட மன்றத்தில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும் ஏப்.23 அன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.