காட்பாடி செஞ்சிலுவை சங்கத்தின் செயலாளர் செ.நா.ஜனார்த்தனனின் சமூக சேவையை பாராட்டி நியு ஜெருசலம் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேந்தர் எஸ்.சௌந்தர்ராஜன் தலைமை தாங்கினார். மாநில மனித உரிமை கழகத்தின் மாநிலத் தலைவர் வி.எம்.பாலாஜி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். நடிகர் பிரகாஷ் ராஜ், ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் ஆடிட்டர் கே.பாண்டியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.