tamilnadu

img

தனியார் கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள் நியமனம்

 

‘கல்வி வேகமாக வணிகமயமாகி வரும் சூழலில், பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இடம்பெற்று வேகமாக வருமானம் ஈட்டலாம் என்கிற துடிப்பு, எப்படியும் மோசடி செய்யலாம் என்கிற நிலைமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதை அனுமதித்தால் உயர்கல்வியின் தரமும், மாணவர்களின் எதிர்காலமும் நிச்சயம் சீரழியும்.’

சென்னை, ஆக.31- அண்ணா பல்கலைக்கழக அனு மதிக்காக தனியார் பொறியியல் கல்லூரிகள் போலி ஆசிரியர்  களை நியமித்தது தொடர்பாக  அமைக்கப்பட்ட மூவர் குழு விசா ரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்தியுள்ளது.

மேலும், முறைகேடுகளில் ஈடு பட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் மட்டுமின்றி தனியார் கல்லூரி நிர்வா கங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.  பாலகிருஷ்ணன் தமது அறிக்கை யில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:

224 கல்லூரிகளில் போலி நியமன மோசடி

பல்வேறு தனியார் பொறியியல்  கல்லூரிகள், அண்ணா பல்க லைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரி என்கின்ற அங்கீகாரத்தை (Affiliation) பெறுவதற்காக 2023-24  ஆண்டில் போலியாக ஆசிரி யர்களை நியமனம் செய்திருப்பது பெரும் மோசடியாகும். 224 பொறி யியல் கல்லூரிகள் இம்மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தன்னார்வ அமைப்  பான ‘அறப்போர் இயக்கம்’ ஆவ ணங்களோடு அம்பலப்படுத்தி உள்  ளது.

அதில், 353 ஆசிரியர்கள் ஒன்றுக்  கும் மேற்பட்ட கல்லூரியிலும், இருவர் 11 கல்லூரிகளிலும், மூன்று பேர் 10 கல்லூரிகளிலும் முழுநேர ஆசிரியர்களாக பணியாற்றுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார் மற்றும் பான் கார்டுகள் போலியாக சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஒரே பேராசிரியர் 32 கல்லூரிகளில் பணி?

ஒரு பேராசிரியர் 32 கல்லூரிகளில்  முழுநேர ஆசிரியராகப் பணியாற்றி யதாக ஆவணப்படுத்தப்பட்டு உள்  ளது என்று அண்ணா பல்கலைக்கழ கத் துணைவேந்தர் பேராசிரியர் ஆர். வேல்ராஜ் சுட்டிக்காட்டி உள்ளார்.  211 நபர்கள் 2500 பதவிகளை நிரப்பி யதாகப் பதிவுகள் உள்ளன என்று அண்ணா பல்கலைக்கழகம் வெளி யிட்ட அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று ஆவணங்கள் அனைத்தை யும் பார்வையிட்ட ஆய்வுக்குழு (Inspection Committee), அண்ணா  பல்கலைக்கழகத்தின் நிலைக்குழு போன்றவை இதனை கவனிக்காமல் போவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படியானால், நடந்த முறைகேடு களில் அவர்களும் பங்கு வகித்தி ருக்கிறார்களா என்ற கேள்வி எழு கிறது. இந்த மோசமான நடை முறை 2023-24 ஆம் ஆண்டில் மட்டும்  தான் நடந்துள்ளதா? என்ற கேள்வி யும் எழுகிறது.

கேள்விக்குறியாகும்  மாணவர் எதிர்காலம்

கல்வி வேகமாக வணிகமயமாகி  வரும் சூழலில், பல்கலைக்கழ கத்தின் உறுப்புக் கல்லூரியாக இடம்பெற்று வேகமாக வருமானம் ஈட்டலாம் என்கிற துடிப்பு, எப்படி யும் மோசடி செய்யலாம் என்கிற நிலைமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதை அனும தித்தால் உயர்கல்வியின் தரமும், மாணவர்களின் எதிர்காலமும் நிச்ச யம் சீரழியும்.

ஏஐசிடிஇ, என்ஐடிடிஆர் (AICTE,  NITTR) மற்றும் அண்ணா பல்க லைக்கழகம் என மூன்று அமைப்பு களும் சேர்ந்து மூவர் குழு ஒன்றை  விசாரணை செய்வதற்காக அமைத் துள்ளன. 

இக்குழு குறுகிய காலத்தில் விசா ரணையை முடித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது மட்டுமல்லாமல், அவர்களைப் பணியமர வற்புறுத்திய  தனியார் பொறியியல் கல்லூரி நிர்வா கங்கள் மீதும், முறைகேடுகளில் ஈடு பட்டுள்ள பல்கலைக்கழக அலு வலர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவர் மீதும் கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும் என  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட்) வலியுறுத்துகிறது.

தமிழக அரசு இதில் உரிய தலை யீடு செய்து உயர்கல்வியைப் பாது காக்க வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வற்  புறுத்துகிறது.

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.