பணி நியமன ஆணை
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக நடைபெற்ற குரூப் நான்கு தேர்வு மூலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.