tamilnadu

img

எல்.ஐ.சி.யை பாதுகாக்க எம்பிக்களிடம் முறையீடு...

சென்னை:
எல்.ஐ.சி.- யின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய பாஜக அரசின் முடிவை கைவிடக் கோரியும்,  தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாகவே  நீட்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம சார்பில் அனைத்து மாநில, கோட்ட, கிளை நிர்வாகிகள்  தமிழகம் மற்றும் புதுச்சேரி  மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை சந்தித்தனர்.இந்த சந்திப்பின் போது சண்முகம், வைத்தியலிங்கம், அ.ராசா, சுப்பராயன், தமிழச்சி தங்கபாண்டியன்,  தொல்.திருமாவளவன், சி.என்.அண்ணாதுரை,   துரை.ரவிக்குமார், கார்த்திக் சிதம்பரம், தனுஷ் எம்.குமார், சண்முகசுந்தரம் ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.

;