tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்று... ஒரே நாளில் 79 பேர் பலி...

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தினசரி பாதிப்பு தொடர்ந்து 2 நாளாக 4500-க்கு மேல் எகிறியுள்ளது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள மண்டலமான சென்னையில் கொரோனா பரவல் சற்று தணிந்தாலும், தற்போது மக்கள் நெருக்கம் இல்லாத மாவட்டங்களிலும் வைரஸ் தாக்கம் கணிக்க முடியாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. தினசரி பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4,538 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 1,60,907 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 79 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,315 ஆக அதிகரித்துள்ளது. இன்று (வெள்ளி) ஒரே நாளில் 3,391 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,807 ஆக உயர்ந்துள்ளது. 

;