tamilnadu

img

சென்னையில் நேற்று இரவு முதல் காலை வரை மேலும் 16 பேர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனா தொற்றால் நேற்று இரவு முதல் காலை வரை 16 பேர் உயிரிழந்தனர். 
தமிழகத்தில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தலைநகர்  சென்னையிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும்  உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் நேற்றுவரை 95 ஆயிரத்து 857 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு நேற்றுவரை 2,032 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவர்களில்  நேற்று இரவு முதல் இன்று காலை வரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேர் மற்றும் நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 16 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.