tamilnadu

img

பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

சென்னை, ஜூன் 2- பள்ளிகள் திறப்பதையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால், பள்ளிகள் திறப்பை தமிழ்நாடு அரசு ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்புவதற்கு வசதியாக 2,200 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

மேலும், பல்வேறு நகரங்களிலிருந்து சென்னைக்கு மட்டும் 900 அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சிறப்பு பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

;