சிதம்பரம், ஜூலை 19- அண்ணாமலை பல் கலைக் கழக வேளாண் புலத்தில் மத்திய வெளியுற வுத் துறையுடன் இணைந்து மாணவர் கலந்துரையாடல் நிகழ்ச்சி புல முதல்வர் முனைவர் சாந்தா கோவிந்த் தலைமையில் நடை பெற்றது. சாந்தா கோவிந்த் பேசு கையில், வெளியுறவுத் துறை யுடன் இணைந்து நடத்தப்ப டும் இத்தகைய மாணவர் கலந்துரையாடல் நிகழ்வு கள் மாணவர்கள் வெளி நாடுகளில் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பெறவும் போட்டித் தேர்வுக ளில் வெற்றி பெற பெரிதும் உதவும் என்றார். தற்போது ஜப்பான் நாட்டின் இந்திய கவுன்சில் ஜெனரலாக உள்ள அண்ணா மலை பல்கலைக்கழக வேளாண் புல முன்னாள் மாணவர் பாலசுப்பிரமணி யன் ஷியாம் கலந்து கொண்டு மாணவப் பருவ செயல்பாடுகளை நினைவு கூர்ந்தார். உலகம் முழுவ தும் அமைதி, வளம், உணவு, பாதுகாப்பு மற்றும் கலாச்சார உறவுகள் மேம்பட இந்திய வெளியுறவுத் துறை கடு மையாக முயன்று வருவ தாக தெரிவித்த அவர் வேளாண் மாணவர்கள் இன்றைய போட்டித் தேர்வு களில் கலந்து கொண்டு தன்னம்பிக்கை மற்றும் கடுமையான உழைப்பு மூலம் உயர்பதவிகளுக்கு வந்து நமது நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார். இதில் துபாய் நாட்டின் குரோவர் நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் செந்தில், அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் ரவிச்சந்திரன், வேளாண் புல துறைத் தலை வர்கள் மூத்த பேராசிரி யர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.