அண்ணா பல்கலை. கல்லூரிபேராசிரியர்கள் முறைகேடு
விசாரிக்க குழு அமைப்பு
சென்னை, ஜூலை 24- அண்ணா பல்க லைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரி பேராசிரியர்களின் முறைகேடு தொடர் பாக விசாரிக்கக் குழு அமைக்கப்பட் டுள்ளதாக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய 224 தனி யார் பொறியியல் கல்லூரிகளில் 350-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் ஒரே பெயரில் வெவ்வேறு கல்லூரிகளில் பணி யாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அறப் போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது.
இந்த நிலையில் அண்ணா பல்க லைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தபோது, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இருக்கக் கூடிய இணை கல்லூரிகளில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது உண்மைதான். எனவே, முறைகேடு தொடர்பான ஆதாரங்கள் அடிப்படை யில் விசாரணை நடத்தக் குழு அமைக் கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
189 பேராசிரியர்கள் இந்த முறை கேட்டில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள் ளார். அதாவது, ஒரே பேராசிரியர் தன்னு டைய ஆதார் எண்ணை மாற்றி சுமார் 32 கல்லூரிகளில் பணிக்கு சேர்ந்து அதன் மூலம் வருவாய் ஈட்டியுள்ளார்.
மொத்தமாக 50 கல்லூரிகள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது, பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறி னார்.
விஷச் சாராய வழக்கு
ஆகஸ்ட் 6-க்கு ஒத்திவைப்பு
சென்னை, ஜூலை 24- கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்ப வத்தை சிபிஐ விசாரிக்கக் கோரிய வழக்குகளை, சென்னை உயர்நீதி மன்றம் ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
விசாரணை நிலவரம் குறித்து அறிக்கை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. அரசு அறிக்கை அடிப்ப டையில் வாதங்களை முன்வைக்க உள்ள தாக அதிமுக, பாமக தரப்பு தகவல் தெரி வித்த பின்னணியில், இறுதி விசாரணைக் காக வழக்குகளை ஆகஸ்ட் 6-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கல்வராயன் மலை பகுதியை முதல்வர் ஆய்வு செய்ய வேண்டும்!
சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னை, ஜூலை 24- கல்வராயன் மலைப்பகுதியில் முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் சென்று பார்வையிட வேண் டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித் துள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதை யொட்டி, கல்வராயன் மலைப்பகுதியில் விஷச் சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வராயன் மலையில் வசித்து வரும் மக்கள் மேம்பாடு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு புதனன்று (ஜூலை 24) விசாரணைக்கு வந்தது.
அப்போது, “கல்வராயன் மலைப் பகுதிக்கு சென்று, மக்கள் நிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அமைச்சர் உதய நிதி மற்றும் அமைச்சர்கள் சென்று பார்வையிட வேண்டும்” என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும், “நாங்கள் சென்று பார்வையிடுவதை விட, அமைச்சர்கள் சென்றால் அதிகாரிகள் நடவ டிக்கை எடுப்பார்கள். கல்வராயன் மலைப்பகுதி யில் சாலை வசதி, ரேசன் கடைகள் உள்ளிட்ட வசதி களை ஏற்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், கல்வராயன் மலைப் பகுதி மக்க ளின் நிலை குறித்து, தமிழக அரசு அறிக்கை தாக் கல் செய்ய அவகாசம் அளித்து, வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
பள்ளி மேலாண்மை கூட்டம்
முன்னாள் மாணவர்கள் பெற்றோர்க்கு
முதல்வர் அழைப்பு
சென்னை, ஜூலை 24- தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 2 அன்று பள்ளி மேலாண்மை கூட்டம் நடை பெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெற்றோர் மற்றும் முன்னாள் மாண வர்களுக்கு காணொளி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.
அதில், “தமிழகத்தில் உள்ள அனைத் துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழுக்களை மறு சீரமைப்பு செய்ய அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படுகின்றன. எனவே, கடந்த இரண்டு ஆண்டுகள் போன்று இந்தாண்டும் பெற் றோர்கள், முன்னாள் மாணவர்கள் அரசு டனும், பள்ளிகளுடன் இணைந்து செயல் பட வேண்டும்; பள்ளி மேலாண்மை மறு சீரமைப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அரசுப் பள்ளியை செம்மை யாக்கி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று உங்களை அன்புடன் அழைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வூதியர்க்கு நேரடியாக உயிர்வாழ் சான்றிதழ்!
அஞ்சல் துறை ஏற்பாடு
சென்னை, ஜூலை 24- ஓய்வூதியர்கள் தொடர்ந்து ஓய்வூதி யம் பெற தங்களின் உயிர்வாழ் சான்றி தழை சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இதற்காக ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்களின் வீட்டு வாசலிலேயே, பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி யும், முக அடையாளம் வைத்தும், டிஜிட் டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது.
ஓய்வூதியர்கள் தங்கள் பகுதி அஞ்சல ரிடம் ஆதார், செல்போன் எண், பி.பி.ஓ. எண் மற்றும் ஓய்வூதிய வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்க ளில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். இதற்கு சேவைக் கட்டணமாக ரூ. 70 அஞ்சலரிடம் செலுத்த வேண்டும்.
கல்வித் துறை ஒப்பந்தம்
5-ஆம் வகுப்பு வரை படிப்ப வர்களுக்கு அஞ்சல் துறை கணக்கும், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்த வர்களுக்கு அஞ்சல் துறை வங்கிக் கணக்கு தொடங்க தமிழக பள்ளிக்கல்வி துறை - அஞ்சல் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
எனவே, பள்ளிகள் அல்லது அஞ்சல் நிலையங்களில் கணக்குகளை தொடங்க லாம் என்று முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் சுவாதி மதுரிமா தெரிவித்துள்ளார்.