tamilnadu

img

சிறப்பு அரியர் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை,ஆக.25- அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறி யியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தின் கீழ் படித்து அரியர் வைத்துள்ள மாணவர் களுக்கு இறுதி வாய்ப்புகளாக சிறப்பு செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆண்டு களில் நடத்தப்பட்டன. அதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் சிறப்பு அரியர் தேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. 

அதன்படி 2024 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும், 2025 ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் சிறப்பு அரியர் தேர்வுகள் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

நவம்பர், டிசம்பர் மாத சிறப்பு அரியர் தேர்வுக்கு மாணவர்கள் வருகிற 30 ஆம் தேதி முதல் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை https://coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் மாண வர்கள் விண்ணப்பிக்கலாம். சிறப்பு தேர்வு கட்டணமாக ரூ.5 ஆயிரமும் வசூலிக்கப் படும். விண்ணப்பப் பதிவு, தேர்வு மையங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங் களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அண்ணா பல் கலைக்கழகம் தெரிவித்துள்ளது.  சிறப்பு அரியர் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் சென்னை, விழுப்புரம், ஆரணி, சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.