tamilnadu

img

உயிர் வாழ தண்ணீர் தேடி உயிரிழக்கும் விலங்குகள்

உளுந்தூர்பேட்டை, மே 17-வனவிலங்குகளை பாதுகாக்க காப்புக்காட்டில் எத்தனையோ குட்டைகளும், ஏரிகளும், தண்ணீர் தொட்டிகளும் இருந்தும் அவற்றில் சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் வறண்டுபோயுள்ள தால் அவை தண்ணீர் தேடி காடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் அலைந்து விபத்தில் உயிர் இழப்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தண்ணீருக்கு ஏற்பாடு செய்து வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை வனச்சரகத்திற்குட் பட்ட எடைக்கல் காப்புக் காட்டில் பில்லூர் குறுக்கு சாலையிலிருந்து எலவனாசூர்கோட்டை செல்லும் சாலையில் உள்ள காப்புக்காட்டில் இருந்து வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மான் குட்டி ஒன்று தண்ணீர் தேடி அலைந்து உள்ளது. ஆனால் தண்ணீர் எங்கேயும் கிடைக்காததால் கடும் வெயிலின் காரணமாக சாலையோரம் மயங்கி கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அப்போது அவ் வழியாக சாலையில் சென்ற சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மயங்கி கிடந்த மான்குட்டியின் மேல் அவர்கள் கையில் வைத்திருந்த தண் ணீரை ஊற்றியும், அதன் வாயில் ஊற்றி அதனை குடிக்க வைக்கவும் செய்தனர்.அதன்பிறகு பொதுமக்கள் வனத்துறை அதிகாரிக்கும், எடைக்கல் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து வந்த தனிப்பிரிவு போலீசார் சக்திவேல், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் மான்குட்டியை மீட்டனர். உளுந்தூர் பேட்டை கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.இந்த காப்புக் காட்டில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் பலவகை மரங்கள், செடி, கொடிகள் உள்ளன. பல வனவிலங்குகள் உள் ளன.

இந்த வனவிலங்குகள் அனைத் தும் உணவு, தண்ணீர்தேடி காட்டை விட்டு வெளியே செல்லாதபடியும் தண்ணீரைத் தேடி அலையாத நிலையை ஏற்படுத்த இந்த காப்புக் காட்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெரியஏரிகள், குளங்கள், குட்டைகள், சிமெண்ட் தொட்டிகள் என அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இவ்வளவு இருந்தும் முறையாக பராமரிப்பு இல்லாததால் கோடை காலத்திற்கு ஏற்றார் போல் நீர் நிலைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் வனவிலங்குகளை வாட்டி வதைக்கப்பட்டு குடிதண்ணீருக்காக காட்டை விட்டு வெளியே வந்து சாலையில் வாகனங்கள் மோதி அடிபட்டு இறக்கின்றன. சில தினங் களுக்கு முன்பு கூட வளர்ந்த மான் ஒன்று வாகன விபத்தில் இறந்து கிடந்தது. விவசாய நிலங்களுக்கு தண்ணீர்தேடி செல்லும்போது சமூக விரோதிகளா லும், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட பல விலங்குகளாலும் வேட்டையாடப்பட்டு பரிதாபமாக உயிரிழக்க நேரிடுகிறது.வன விலங்குகளை காப்பாற்றுவதற்கு நீராதாரங்களை போர்க்கால அடிப்படையில் உருவாக்கிட வேண்டும். அல்லது ஒரு ஆழ்துளை போர் அமைத்து சொட்டுநீர் பாசனம் போல உருவாக்கி வனவிலங்குகள் உயிர் வாழ்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும். தமிழக அரசும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் விழிக்காவிட்டால் வனவிலங்குகள் வீழ்ந்திடும் நிலைத் தொடரும்.