வேலூர், ஏப்.25- அங்கன்வாடி ஊழியர்களின் நலன்களை கருதி கோடை காலமான மே மாதத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு விடுவதைப்போல் அங்கன்வாடி மையங்களுக்கும் மே மாதம் விடுப்பு வழங்க வேண்டும். 10 குழந்தைகளுக்கு குறை வாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையங்களாக்குவதையும் 5 குழந்தை களுக்கு குறைவாக இருக்கும் மையங் களை பிரதான மையங்களோடு இணைக் கும் திட்டத்தை கைவிட வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 மையங்கள் கொடுப்பதை கைவிட்டு காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். பணி நேரம் காலை 9.30 மணியிலிருந்து மாலை 3 மணி என மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய தொடர் காத்தி ருப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளர் கே.ஜுலி தலை மையில் நடைபெற்றது. சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எம்.பி.ராமச்சந்திரன் துவக்கி வைத்தும், மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன் நிறைவு செய்தும் பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் சி.தேவி, மாவட்ட துணை நிர்வாகிகள் உமா, மல்லிகா, கோகிலா உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சிஐடியு மாவட்டப் பொரு ளாளர் எம்.கோவிந்தராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அ. சேகர், மாதர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.டி.சங்கரி, உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்பு குழு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.செல்வி ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர்.