tamilnadu

img

அடிப்படை வசதியற்ற அங்கன்வாடி மையங்கள்

அம்பத்தூர், அக். 6- ஆவடி காமராஜர் நகர் பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி மருத்துவமனை வளாகத்தில் நந்தவன மேட்டூர், பஜார் நகர் ஆகிய பகுதிகளுக்கான அங்கன்வாடி மையம் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இதில் தலா 20 குழந்தைகள் உள்ளனர். இந்த மையம் முறையே 2004, 2013ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட இரண்டு மையத்திலும் குழந்தைகளுக்கு குடிநீர், கழிப்பறை வசதி கிடையாது. இதனால் குழந்தைகள் மாநகராட்சி மருத்துவமனை வளாகத்திலேயே சிறுநீர் மலம் கழிக்கின்றனர்.  இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், குழந்தைகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் கட்டடங்களை முறையாக பராமரிக்காததால் மேற்கூரையில் இருந்து மழைக்காலத்தில் தண்ணீர் சொட்டுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மழைக் காலங்களில் குழந்தைகளை அமரவைத்து கல்வி கற்றுக் கொடுக்க முடியவில்லை. மையத்தின் ஜன்னல் கதவுகள் உடைந்து கிடக்கின்றன. இதனால் காற்றுடன் கூடிய மழை பெய்தால் மழை நீர் உள்ளே விழுகிறது. இதனால் மைய த்தில் வைக்கப்படுள்ள உணவுப் பொருட்களும், நோட்டுப் புத்தகங்களும் மழையில் நனைந்து வீணா கின்றன. மையங்களில் உள்ள மின் விளக்குகள் சரியாக எரிவதில்லை. இத னால் பகல் நேரத்திலேயே மையம் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன என்ற னர். மேற்கண்ட பல்வேறு பிரச்சனைகளால் குழந்தை களை பெற்றோர்கள் அச்சத்துடன்தான் இரு மையங்களுக்கு அனுப்பும் சூழ்நிலை உள்ளது. எனவே உடனடியாக இரண்டு அங்கன்வாடி மைய கட்டங்களை சீரமைத்து, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.