சென்னை, ஏப். 11 -
அரசுப்பள்ளி மாணவிகளின் வீடுகளுக்குச் சென்று நாப்கின்களை வழங்கும் பணியில் சத்துணவு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட அரசு உத்தரவிட்டுள்ளது, அதன்படி சத்துணவு. அங்கன்வாடி ஊழியர்கள் சுகாதார பணியாளர்களுடன் இணைந்து வீடுவீடாக சென்று நோயாளிகள் பற்றிக் கணக்கெடுக்கும் பணியைச் செய்து வருகின்றனர்.8ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு அரசு வழங்கும் நாப்கின்களை மாணவிகளின் வீடுகளுக்கே சென்று வழங்குகின்றனர். மேலும், வெளிமாநில தொழிலாளர்கள், அத்தியாவசிய தொழிலாளர்களுக்குச் சமைப்பது போன்ற பணிகளையும் செய்கின்றனர்.
எனவே, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சத்துணவு ஊழியர்களுக்கு, சுகாதார ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் இரட்டிப்பு ஊதியம், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டால் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். ஆய்வுப் பணிகளுக்கு செல்லும் ஊழியர்களுக்கு கையுறை, முககவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க வேண்டும்" என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தலைவர் சுந்தராம்பாள் கோரிக்கை விடுத்துள்ளார்.