tamilnadu

img

கலைஞர் கனவு இல்லம் ஒரு ரூபாய் கூட லஞ்சம் தராதீர்கள்!

சென்னை, ஆக. 20- கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு யாரா வது லஞ்சம் கேட் டால் ஒரு ரூபாய் கூட தராதீர்கள் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

“ஒரு வீடு கட்ட அரசு ரூ. 3.5 லட்சம் ஒதுக்கும் நிலையில் சிலர் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தகவல் வருகிறது. யாராவது லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க வேண்டும்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ள துரை முருகன், “பேரம் பேசி வாங்குவதை விட பிச்சை எடுக்கலாம்” என்றும் லஞ்சம் கேட்பவர்களை சாடியுள்ளார். மேலும், உரிமைத் தொகை பெறாதவர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கும் விரை வில் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றார்.