சென்னை, ஆக. 2- மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வணிகர்கள் கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ளும் நிலை தமிழகத்தில் உரு வாகும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிர மராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்றைக்கு வணிகர்களின் வாழ்வா தாரமே கேள்விக்குறியாகி உள்ளதை பெங்களூர் பெரும் தொழில் அதிபர் வி.ஜி.சித்தார்த்தின் தற்கொலை நிகழ்வு நிரூபித்து கொண்டுள்ளது. இதன் பின்னணியை மத்திய, மாநில அரசுகள் ஆராய்ந்து உரிய நட வடிக்கை எடுக்கவில்லை எனில், விவசாயி கள் தற்கொலையைத் தொடர்ந்து வணிகர்கள் தற்கொலை என்பது தொடர் நிகழ்வுகளாகி விடும். இதன் பின்னணி பொருளாதாரப் பின்ன டைவு என்றாலும் கூட, அதற்கு காரணம் ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் கோர முகங்களும் ஆகும். ஜி.எஸ்.டி சட்டத்தில் உள்ள குளறுபடி களை களைந்திட, அதிக விழிப்புணர்வு முகாம்களை அரசு அமைத்து குறைந்தது 2 ஆண்டுகள் அதற்கான காலக்கெடுவை நிர்ணயித்திருக்க வேண்டும். மத்திய அரசின் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டமே 36 தடவை கூடி வரிவிகிதத்தில் 94 முறை திருத்தங்களை செய்துள்ளது. இந்நிலையில் வணிகர்களுக்கும் கால அவகாசம் என்பது மிக அவசியம். சாதாரணமாக பிராண்டட் பொருட்க ளுக்கு 5 விழுக்காடு வரி என்று அறி வித்துள்ளனர். ஆனால், பிராண்டட் இல்லாத வணிக நிறுவனத்தின் பெயர் மட்டுமே பதித்துள்ள பேக்கிங் பொருட்களுக்கும் 2017இல் இருந்து வரி விதிப்போம் என மத்திய மாநில ஜி.எஸ்.டி வரி அதிகாரிகள் அடா வடித்தனமாக அத்துமீறி வரி, வட்டி, அபரா தம் என ஒவ்வொரு சூப்பர் மார்க்கெட்டுக்கும் பல லட்சம் பலகோடி விதிக்க முனை கிறார்கள். மேலும் ஆய்வு முடியும் வரை கடையை மூடிவிடுகிறார்கள். இதனால் ஒரு நாள் விற்பனை பாதிக்கப்பட்டு, மறுநாள் வங்கிக்கு செலுத்த வேண்டிய காசோ லையை செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டு, வரி, வருவாய் இழப்பு ஏற்படுத்தும் நிலை உருவாகிறது. இந்நிலை தொடருமானால் சிறு, குறு, மத்திய நிறுவனங்களின் வணிகம் பாதிப்ப டைவதோடு மட்டுமல்லாமல் வருவாய் இழப்பு வரி தாமதம், தண்டம், என அனைத்தை யும் ஒருசேர சுமக்கும் நிலை ஏற்பட்டு, வணி கர்கள் ஆற்றில் நீர் இல்லாத நிலையில் கட லில் குதித்து தற்கொலை செய்துகொள்ளும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.