tamilnadu

அமுல் பால் லிட்டருக்கு ரூ. 2 உயர்வு

சென்னை, மே 21-பால் விலையை, லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தவுள்ளதாக அமுல் நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகரித்துவரும் பால் உற்பத்திக்கு ஆகும் செலவை கணக்கில் கொண்டே இந்த விலை உயர்வு முடிவை எடுத் துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், மே 21 ஆம் தேதி முதல் இந்த புதிய விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.தில்லி, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விற்பனையாகும் அந் நிறுவனத்தின் 6 வகை பால் பாக்கெட்டு களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமுல் நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போதுதான் பால் விலையை உயர்த்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

;