tamilnadu

இந்தியாவின் உயிர்த்துடிப்பே ‘அம்பேத்கர்’ திரும்பத் திரும்ப உச்சரிப்போம்! சென்னை ஆர்ப்பாட்டத்தில் கே. பாலகிருஷ்ணன் பேச்சு

சென்னை, டிச. 19 - அம்பேத்கர் பெயரை திரும்பத்  திரும்ப உச்சரிப்போம்; ஏனெனில் அந்தப் பெயர் இந்தியாவின் உயிர்த்துடிப்பு என்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கர் மீதான உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் வெறுப்புணர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் வியாழனன்று (டிச. 19) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், மாநிலக்குழு உறுப்பினர் க. சுவாமிநாதன், மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் ஆறு முகம், இரா.முரளி, எஸ்.கே. முரு கேஷ், சர்வேசன், தனலட்சுமி, எஸ்.வி.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசுகையில், மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் கூறியதாவது:

இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையான அம்பேத்கர் மீது மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கக்கிய வெறுப்பைக் கண்டித்து நாடு முழு வதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள் ளது. அம்பேத்கர் இந்தியாவிற் கான அரசியல் சாசனத்தை உரு வாக்கியவர் மட்டுமல்ல, இந்தியா வில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்க ளுக்காக தன்னுடைய வாழ்க்கை யை அர்ப்பணித்தவர் மட்டுமல்ல, நாட்டில் உள்ள தலைசிறந்த சிந்த னையாளர்களில் ஒருவராக திகழ்பவர் என்று சுட்டிக்காட்டினார்.

அமைச்சராக நீடிக்க தகுதியில்லை

அரசியல் சாசனத்தின் 75-ஆவது ஆண்டு விழாவை மக்கள வையில் கொண்டாடிக் கொண்டி ருக்கும் நேரத்தில், அந்த அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் மிகக் கேவலமாக உள் துறை அமைச்சர் பேசியுள்ளார். அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத் கர் என்று கூறுவது இன்றைக்கு பேஷனாகி விட்டது. இதற்கு பதில்  கடவுள் பெயரை கூறினால் புண்ணி யம் கிடைக்கும், சொர்க்கத்திற்கு போகலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளார். கடவுளின் பெயரை உச்சரித்தால் புண்ணியம் கிடைக்கிறதோ இல்லையோ, அம்பேத்கர் பெயரை திரும்பத் திரும்ப உச்சரிக்கும் போது தான்,  இந்தியா உயிர்த்துடிப்பாக இருக்கிறது என்று கருதுகிறோம்.

ஆனால், அவரை அமித் ஷா  இழிவுபடுத்தி பேசுகிறார் என்றால்,  அதற்கு அவர் ஏற்றுக் கொண்டி ருக்கும் வர்ணாஸ்ரம தர்மத்தின் உள் உணர்வுதான் காரணம். சாதி யக் கட்டமைப்பை பாதுகாக்கக் கூடிய ஆர்.எஸ்.எஸ். - சாவர்க்கர் வழியிலே வந்திருப்பது தான், அமித் ஷா பகிரங்கமாக மாநி லங்களவையில் பேசுவதற்கு காரணம். அரசியல் சாசனத்தை உரு வாக்கியவரை இழிவுபடுத்திய ஒரு வர், இந்த நாட்டின் உள்துறை அமைச்சராக இருப்பதற்கு அரு கதையற்றவர். உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும்.

மறைகழன்று விட்டதா?

அம்பேத்கரை கொச்சைப் படுத்தி பேசும் அளவிற்கு அமித் ஷாவுக்கு தைரியம் வந்திருக்கிறது. அம்பேத்கரை இழிவுபடுத்தியதை இந்திய மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமல்ல, அனைத்து மக்களும் இதற் கெதிராக கண்டனக் குரல் எழுப்பி வரு கிறார்கள். அமித் ஷாவை பதவி நீக்கம் செய்யவில்லை என்றால் நாட்டில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்படும்.

அம்பேத்கரை புகழ்ந்துதான் அமித் ஷா பேசியுள்ளதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகிறார். இப்படி  பேசுவது தான் புகழ்ச்சி என்றால், அண்ணா மலைக்கு மறை கழன்று விட்டது என்று கூற மாட்டார்களா? அம்பேத்கரை இழிவுபடுத்தி யது தவறு என்று ஒப்புக் கொண்டு, மன்னிப்புக் கேட்பதற்கு முன்வராமல், அமித் ஷாவுக்கு ஆதரவாக அண்ணாமலை பொய்யுரை எழுதுவது கண்டனத்திற்கு உரியது.

அம்பேத்கர் பெயரை பலரும் சுய நலத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்று புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கூறு கிறார் என்றால், அவரைப் பொறுத்தவரை எப்போதுமே அம்பேத்கரை அவருக்குப் பிடிக்காது. இதுவரை அவர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உள்ளாரா? அவர் சொல்வது போல, அம்பேத்கரை சுய நலத்திற்காக யாரும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவரை சுயநலத்திற்காக எப்படி, எதற்காக பயன்படுத்த முடியும்.  அம்பேத்கரை சட்டமேதை என்பதை கடந்து, பொருளாதாரத்தில், தத்துவத்தில், வர லாற்றில் என்று அவர் ஒரு தலை சிறந்த சிந்தனையாளர். அவரை இழிவு படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் கூறினார்.