tamilnadu

img

குண்டும் குழியுமாக மாறிய அம்பத்தூர் தொழிற்பேட்டை மேனாம்பேடு சாலை

அம்பத்தூர், செப். 17- அம்பத்தூர் தொழி ற்பேட்டை பேருந்து நிலைய த்தில் இருந்து பட்டரை வாக்கம் மேனாம்பேடு செல்லும் பிராதான சாலை குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாக மாறி, சாலை யில் தேங்கி நிற்கிறது மழை நீர். அம்பத்தூர் தொழிற்பேட்டை சிட்கோ பகுதியில் 3000க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இதன் அருகாமையில் மண்ணூர்பேட்டை, கச்ச னாங்குப்பம், மங்களபுரம், பட்டரைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து கொரட்டூர், அம்பத்தூர் கள்ளிக்குப்பம், கருக்கு, மேனாம்பேடு ஆகிய பகுதிகளுக்கும் இந்த சாலையின் வழியாகத்தான் தொழிலாளர்கள், பொது மக்கள் சென்று வருவார்கள். மேலும் இந்த சாலை வழியாக அன்றாடம் ஆயி ரக்கணக்கான தொழிலா ளர்கள் வேலைக்கு சென்று வருகிறார்கள். மேலும் கனரக வாகனங்கள், லாரி, சிறிய வாகனங்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாததால் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக, சேறும் சகதியு மாக காட்சியளிக்கின்றன. மேலும் சிறு மழை பெய்தால் கூட சாலையில் குளம் போல் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டி கள் பெரும் அவதிப்படு கின்றனர். முதியவர்கள், பெண்கள், பள்ளி கல்லூ ரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சாலையில் நடந்து கூட செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இரவில் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறினார்கள். மோட்டர் பைக் ஓட்ட உரிமம் எடுக்க இருப்ப வர்கள் இந்த சாலையில் ஒரு நாள் வாகனம் ஓட்டினால் போதும் எளிதில் 8 போட கற்றுக் கொள்ளலாம். அந்த அளவுக்கு சாலைகளின் பெரும்பகுதி குண்டும் குழியுமாக மாறி வளைந்து வளைந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. எனவே சென்னை மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் விரைந்து சாலையை சீர மைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.