tamilnadu

மெட்ரோ சுரங்கப்பாதையிலும் தடங்கலற்ற மொபைல் சேவை

சென்னை, நவ.14 சென்னை மெட்ரோ ரயில் வழித்தட பயணி கள் சுரங்கப்பாதையில் ரயிலில் செல்லும் போது இனி மொபைல்போனை பயன்படுத்த முடியும். முதலில் இந்த வசதி இல்லாமல் இருந்தது. தற்போது ஏர்டெல் மொபைல் வாடிக்கையாளர்கள் தடங்கலற்ற உயர்வேக டேட்டா மற்றும் குரல் அழைப்பு இணைப்பு வசதியினை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.  ஏர்டெல் 4ஜி டேட்டா மற்றும் குரல் அழைப்பு சேவைகள் சென்னை மெட்ரோ வில் பேஸ் 1 மற்றும் 2-ன் ரயில் நிலையங்களி லும், தரைக்கு கீழே மற்றும் தரைக்கு மேலே செல்கின்ற வழித்தடங்கள் முழுவதி லும் இப்போது கிடைக்கிறது. இந்த வழித்தடங்களில் தினசரி பயணிக்கின்ற லட்சக்கணக்கான பயணிகளுக்கு இது பெரிதும் உதவும் என்று பார்தி ஏர்டெல் - ன் தமிழ்நாடு மற்றும் கேரளா பிராந்தியத்தி ற்கான தலைமைச் செயல் அலுவலர்  மனோஜ் முரளி தெரிவித்துள்ளார்.