tamilnadu

img

சென்னையில் ஆட்டோ இயக்க விரைவில் அனுமதி

காவல்துறை அதிகாரிகள் உறுதி

சென்னை, மே 25- சென்னையில் ஆட்டோக்களை இயக்க விரைவில் அனுமதி வழங்கப்  படும் என்று காவல்துறை அதிகாரி கள் உறுதி அளித்துள்ளனர். கொரோனா தொற்று பர வலை தடுக்க மார்ச் 24ந் தேதி ஊர டங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத்  தொடர்ந்து ஊரடங்கு 4 முறை நீட்டிக்கப்பட்டு 60 நாட்களை கடந்துள் ளது. ஊரடங்கால் ஆட்டோக்களை இயக்க முடியாததால் தொழி லாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நலவாரிய உறுப்பி னர்களுக்கு அறிவித்த 2 ஆயிரம்  ரூபாய் நிவாரணத்தை அனைத்து  ஓட்டுநர்களுக்கும் வழங்க வேண்டும்.  மேலும் 15 ஆயிரம் ரூபாய் நிவார ணம் தர வேண்டும், எப்.சி, லைசன்ஸ்  புதுப்பித்தலுக்கு கால அவகாசம் வழங்க வேண்டுமென்று சிஐடியு தலைமையிலான ஆட்டோ ஓட்டுநர்  சங்கங்கள் சார்பில் தமிழகம் முழு வதும் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பான கோரிக்கை மனு  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு, சென்னையை தவிர்த்து பிற பகுதி களில் ஆட்டோக்களை நிபந்தனை யுடன் இயக்க அனுமதி அளித்துள் ளது.

இந்நிலையில், சென்னையிலும் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வலியுறுத்தி திங்களன்று (மே 25) தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகே ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடந்தது. இதனையறிந்து அங்கு வந்த காவல்துறை உதவி ஆணையர் அனந்தகுமார், தண்டையார் பேட்டை  காவல் ஆய்வாளர் தேவேந்திரன் ஆகியோர், சென்னையில் ஜூன் 1ந்  தேதி முதல் ஆட்டோக்களை இயக்க  அனுமதி பெற்றுத் தருவதாக உறுதி யளித்தனர். இந்தப் போராட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஆர். லோகநாதன், ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் பகுதி தலைவர் பி. மாரி முத்து, செயலாளர் எஸ்.குமரன், பொருளாளர் எம்.லோகய்யா, சிஐடியு நிர்வாகி வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.