tamilnadu

img

7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டிற்கு அனுமதி தருக... துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்க... தமிழகம் முழுவதும் சிபிஎம் போராட்டம்

சென்னை:
நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அனுமதி தர மறுத்தால், ஆளுநரைதிரும்ப பெறக்கோரி போராட்டம் நடத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம்உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும், சட்டத்திற்கு விரோதமாக, தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிக்கக் கூடாது; அதற்காக நிறைவேற்றப்பட்ட மசோதாவை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (அக்.20) தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் ஆளுநர் மாளிகை அருகேகொட்டும் மழையிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சூரப்பாவுக்கு என்ன அதிகாரம்?
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். மக்கள் மத்தியில் எழுச்சிஏற்பட்ட பிறகு, அதிமுக அரசு சற்றுகாலதாமதமாக, அவரை கண்டித்துள்ளது; உயர்சிறப்பு கல்வி நிறுவன அந்தஸ்து வேண்டாம் என்று அறிவித்துள்ளது. சூரப்பா, மத்தியஅரசுக்கு கடிதம் எழுதியபோதே சூரப்பா நீ யாரப்பா? என தமிழக அரசுகேட்டிருக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கக்கூடாது, தன்னிச்சையாக கடிதம் எழுதிய துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.துவக்கத்திலிருந்தே நீட் தேர்வு கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது.மாநில அரசும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. நீட் தேர்வுக்கு முன்பாக பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அப்போது அரசுப்பள்ளியில் பயின்றமாணவர்கள் மருத்துவப் படிப்பில் 2015-16ல் 456பேரும், 2016-17ல் 438 பேரும் சேர்ந்தனர். நீட் தேர்வு அமலான 2017-18ல் 40 பேர்தான் சேர்ந்தனர். எனவேதான், அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படு வதை தடுக்க 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க ஒருமனதாக செப்.15 அன்று சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. பாஜக கூட எதிர்க்கவில்லை.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஆளுநர்அந்த சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக செப். 18ஆம் தேதி அனுப்பிவைக்கப்பட்டது. சுமார் 40 நாட்களாகியும் ஆளுநர் ஒப்புதல் தராமல் உள்ளார். காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டு, பாஜக ஆட்சி செய்யும் கர்நாடகாவில் தற்போது கிராமப்புற மாணவர்களுக்கு 15 சதவீதம் உள்ஒதுக்கீடும், கன்னட மொழியில் படித்து, நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 5 சதவீதம் உள்ஒதுக்கீடும் அமலில் உள்ளது.அரசியலமைப்புச் சட்ட பிரிவு 200ன்படி, ஒரு மாநில அரசு மசோதா நிறைவேற்றினால் அதை ஆளுநரால் மறுக்க முடியாது. தற்போது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநர் அரசியலமைப்பு சட்டப்படி செயல்படுகிறாரா? மோடி வழிகாட்டுதல்படி செயல்படுகிறாரா? என்பதை விளக்க வேண்டும்.நீட் தேர்வை வேண்டாமென்று சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பப் பட்டது. மாதக்கணக்கில் ஆகியும் ஒப்புதல் தராததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., டி.கே.ரங்கராஜன் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார். அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவ்வாறு எதுவும்வரவில்லை என்று பதில் கடிதம்அனுப்பினார். மத்திய அமைச்ச ரவை ஒப்புதல் கொடுத்தால்தான் குடியரசு தலைவர் ஒப்புதல் தரமுடியும். அதுபோல மாநில அரசுநிறைவேற்றிய சட்டத்திற்கு ஆளு நர் ஒப்புதல் தர மறுப்பது ஏன்?

நீட் தேர்வு முடிவுகள் வந்து, மாணவர் சேர்க்கை துவங்கப்படா மல் உள்ளது. ஆளுநர் ஒப்புதல் தராமல் மாணவர் சேர்க்கையை தொடங்க முடியாது என்று அமைச்சர் கூறுகிறார். இந்த விவகாரத்தில் மாநில அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. குறிப்பிட்ட காலத்திற்குள் சட்டத்திற்கு ஒப்புதல் தராவிடில் ஆளுநரை மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்தப் போராட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஏ.பாக்கியம் (தென்சென்னை), எல்.சுந்தரராஜன் (வடசென்னை). ஜி.செல்வா (மத்தியசென்னை), மாநிலக்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.