காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனல் மின் நிலையங்களை மூடாதே, எல்.ஐ.சி., ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது, ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக வழங்கப்படாமல் உள்ள வழங்க வேண்டிய பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் சென்னை திருமங்கலத்தில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவளக வளாகத்தில் அருணாச்சலம் தலைமையில் வியாழனன்று (மார்ச் 12) நடைபெற்றது. இதில் மாநில துணை பொதுச்செயலாளர் கே.ரவிச்சந்திரன், எஸ்.தசரதன், பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.