tamilnadu

img

திரிபுராவில் பாஜக வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்

திரிபுராவில் ஆளும் பாஜகவின் வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து சிபிஎ 
மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

திரிபுராவில் ஆட்சியில் உள்ள பாஜக, அரசு அதிகாரத்தை கையில்
வைத்துக் கொண்டு மக்கள் விரோத குண்டர்களை ஏவி மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம், பத்திரிகை
அலுவலகம் உள்ளிட்டு 40க்கும் மேற்பட்ட அலுவலகங்களை தாக்கி
சூறையாடியதோடு தீ வைத்து கொளுத்தி வன்முறை வெறியாட்டத்தில்
ஈடுபட்டு வருகிறது. இந்த வன்முறையில் பெண்கள் உட்பட பலர்
படுகாயமடைந்துள்ளனர். இத்தகைய பாஜகவின் பாசிச வன்முறை
வெறியாட்டத்தை கண்டித்து சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்) லிபரேசன்
கட்சிகளின் சார்பில் 24.09.2021 அன்று காலை 10.00 மணி அளவில் சென்னை
வள்ளுவர் கோட்டத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் தோழர்
கே.பாலகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். சிபிஐ மாநில செயலாளர்
தோழர் ஆர்.முத்தரசன், சிபிஐ (எம்.எல்.) செயலாளர் தோழர்
எம்.கே.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த
ஆர்ப்பாட்டத்தில் திரு கி.வீரமணி - திக, திரு டி.கே.எஸ்.இளங்கோவன் -
திமுக, திரு வைகோ எம்.பி., - மதிமுக, திரு கே.எஸ்.அழகிரி - தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டி, திரு.தொல் திருமாவளவன் எம்.பி., - விசிக, திரு
எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., - மனித நேய மக்கள் கட்சி, 
ஜி.ராமகிருஷ்ணன் - அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்),
தோழர் மு.வீரபாண்டியன் துணைச் செயலாளர் - சிபிஐ, திரு.காதர்
மொய்தீன் - இந்திய யூனியன் முஸ்லீம் லீக், திரு. த.வேல்முருகன்
எம்.எல்.ஏ - தமிழக வாழ்வுரிமை கட்சி, திரு. திருமுருகன் காந்தி - மே 17
இயக்கம் மற்றும் திரு. அ.மார்க்ஸ் மனித உரிமை கூட்டமைப்பு ஆகிய
கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்ற உள்ளனர்.

;